நான் தோன்றும் முன்னே தோன்றி என்னொடு வாழ்ந்து .....நான்
மடிந்த பின்னும் வாழும் தமிழுக்கு ...இந்தக் குறிஞ்சி மலரின் வணக்கம்....
பேதை,பெதும்பை
மங்கை,மடந்தை
அரிவை,தெரிவை
பேரிளம் பெண்
என்று படிப்படியாகப்
பயணப்படுவதே இயற்கையின் வியப்புதான் ......
சிறிய விதைக்குள்
ஆலமரம் போல
உனக்குள்
எத்தனை
உருமாற்றம்
பெண்மையை
உணர்கின்றேன்-
முடிசூடா அரசி- நீ
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். -குகன்.